இந்தியாவில் ஒரு IA (இடைக்கால விண்ணப்பம்) மீது உத்தரவு பிறப்பிக்க நீதிமன்றம் எடுக்கும் நாட்களின் எண்ணிக்கை பல காரணிகளைப் பொறுத்து கணிசமாக மாறுபடும் :

#How-many-days-will-it-take-to-place-an-order-in-IA-in-a-court-case

1. நீதிமன்ற அதிகார வரம்பு மற்றும் வழக்கு சுமை போன்றவற்றை கருத்தில் கொள்ளவேண்டும்.

நீதிமன்ற அதிகார வரம்பு மற்றும் வழக்கு சுமை போன்றவற்றின் அடிப்படையில் லோக்கல் கிராமப்புற கீழமை நீதிமன்றங்களில் பெருகியிருக்கும் வழக்குகளில் குறிப்பிட்ட கால அளவுக்குள் வழக்கை முடிப்பதில் சிரமம் இருக்கலாம் காரணம் நீதிமன்றத்தில் அதிகப்படியான வழக்கு, விசாரணைக்கு செலவிடப்படும் காலம்  மற்றும் சாட்சியங்களின் ஒத்துழைப்பின்மையால் வழக்குகள் ஒத்திவைக்கப்படலாம் இதனால் வழக்கு விசாரணை முடிந்து தீர்ப்பு வழங்குவதில் தாமதம் ஏற்படுகிறது.

கீழமை நீதிமன்றத்தில் IA வில் தீர்ப்பு வழங்க சில நாட்களிலிருந்து சில மாதங்கள்வரை ஆகலாம். மாவட்ட நீதிமன்றங்களில் சில வாரங்கள் முதல் சில மாதங்கள் வரை ஆகலாம்

உயர் நீதிமன்றங்களில் வழக்கின் அவசர கால நிலை மற்றும் நிலுவையில் இருக்கும் வழக்குகளை பொறுத்து, சில நாட்கள் முதல் பல மாதங்கள் வரை ஆகலாம்.

உச்ச நீதிமன்றம் பொதுவாக அவசர விஷயங்களுக்கு வேகமாக தீர்ப்பு வழங்குகிறது  IA-கள் மீதான உத்தரவுகள் சில நாட்களுக்குள் நிறைவேற்றப்படலாம், ஆனால் பொதுவாக, வாரங்கள் முதல் மாதங்கள் வரை ஆகலாம்.

2. IA-வின் தன்மையை பொறுத்து காலதாமதம் ஆகலாம்.

அவசர விஷயங்கள் விரைவாக வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும். எடுத்துக்காட்டாக : தடை உத்தரவுகள், இடைக்கால உத்தரவுகள், இடைக்கால தடை உத்தரவுகள், நிரந்தர தடை உத்தரவுகள்,ஜாமீன் ஆகியவை இதுப்போன்ற வழக்குகள் சில நாட்களுக்குள் பட்டியலிடப்பட்டு முடிவு செய்யப்படலாம்.

அவசரமற்ற வழக்குகளில் IA மனுவுக்கு தீர்ப்பு வழங்குவதில் காலதாமதம் ஏற்படுமா என்றால் அப்படி குறிப்பிட்ட நடைமுறை எதுவுமில்லை விசாரணையை பொறுத்து தான் வழக்கின் தீர்ப்பு விரைவாகவும் தாமதமாகவும் வழங்கப்படுகிறது விசாரணை வேகமாக முடிக்கப்பட்டால் வழக்கின் தீர்ப்பும் வேகமாகவே கிடைக்கிறது சில காரணங்களுக்காக விசாரணை தாமதமாகிறது அதைப் பொறுத்து தான் தீர்ப்பும் காலதாமதமாகி கிடைக்கிறது. அதை கவனமாக கையாண்டால் அவசர வழக்கில் மட்டுமல்ல சாதாரண வழக்கில் கூட விரைவாக தீர்ப்பை பெற்றுவிட முடியும்.

 நீதிமன்றத்திற்கு அவசர வழக்கு சாதாரண வழக்கு என்று பிரித்துப் பார்த்து தீர்ப்பு வழங்குவது என்ற பாகுபாடு கிடையாது ஆனால் சில வழக்குகளில் அவசரமாக தீர்ப்பு கொடுக்கவில்லை என்றால் அது மனுதாரருக்கு பெரிய இழப்பை ஏற்படுத்த கூடும் என்பதால் மட்டுமே அந்த வழக்கில் விரைவாக விசாரணை செய்யப்பட்டு தீர்ப்பு வழங்கப்படுகிறது.

3. அவசரமான மற்றும் அவசரமல்லாத சர்ச்சைக்குரிய ஐஏஎஸ் மனுவில் தீர்ப்பு ஏன் தாமதமாக வழங்கப்படுகிறது.

அவசரமான மற்றும் அவசரமல்லாத சர்ச்சைக்குரிய வழக்கில் IA மனுவில் தீர்ப்பு ஏன் தாமதப்படுகிறது என்றால் அதற்கு மூன்று காரணங்கள் இருக்கிறது அவை :

  • எதிர்தரப்பினரின் பதில்கள்.
  • குறிப்பிட்ட வழக்கில் பல விசாரணைகள்.
  • வழக்கு ஒத்திவைப்புகள்.

எதிர்தரப்பினரின் பதில்கள் : எதிர்த்தரப்பின் பதிலுக்காக நீதிமன்றம் காத்திருப்பதால் காலதாமதம் ஏற்படலாம்.

குறிப்பிட்ட வழக்கில் பல விசாரணைகள் : வழக்கில் IA மனுவை தவிர வேறு மனுகளோ அல்லது சாட்சியங்களோ விசாரணை செய்யப்படாமல் மிச்சமிருந்தால் அந்த விசாரணையும் சேர்த்து செய்யப்பட்டால் அந்த விசாரணையில் தாமதம் ஏற்படும்

வழக்கு ஒத்திவைப்புகள் : IA வழக்கு விசாரணை நடந்து கொண்டிருக்கும்போது சாட்சியங்கள் நீதிமன்றத்திற்கு வராமல் இருப்பதனாலோ அல்லது வழக்கறிஞர் வராமல் இருப்பதாலோ அல்லது மனுதாரர் விசாரணைக்கு வராமல் இருப்பதாலோ அல்லது எதிர்மனுதாரர் விசாரணைக்கு வராமல் இருப்பதாலோ நீதிமன்றத்தில் வழக்கை ஒத்திவைக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது இதனால் IA வழக்கில் தீர்ப்பு வழங்குவதில் காலதாமதம் ஆகிறது.

4. IA க்கு அறிவிப்பு வழங்கப்படுகிறதா.

ஆம் IA வழக்கில் எதிர் தரப்பினருக்கு நோட்டீஸ் மூலமாக அறிவிப்பு வழங்கப்படுகிறது இந்த அறிவிப்பு காலம் இரண்டு முதல் நான்கு வாரங்கள் வரை இருக்கலாம்.

அறிவிப்பு இல்லாமல் எந்த தீர்ப்பும் வழங்கப்படுவதில்லை காரணம் எதிர்மனுதாரரின் பதிலைக் கேட்காமல் தீர்ப்புகள் வழங்கப்பட்டால் அது நியாயமான தீர்ப்பாக இருக்காது என சட்டம் சொல்கிறது.

இருந்தாலும் சிலநேரங்களில் எதிர்மனுதாரரின் பதில் இல்லாமலேயே தீர்ப்பு வழங்கப்படலாம் காரணம் எதிர் மனுதாரரின் பதிலைச் சொல்ல அவருக்கு அவகாசம் கொடுக்கப்பட்டும் அந்த அவகாசத்தை பயன்படுத்திக் கொள்ளாமல் எதிர்மனுதாரர் பதிலளிப்பதை தவிர்த்தால் அவர் தரப்பு பதிலைக் கேட்காமலேயே ஒருதலைப் பட்சமாக தீர்ப்பு வழங்கப்படலாம்.

5. IA தீர்ப்பை எவ்வாறு விரைவுபடுத்துவது?

  1. தாக்கல் செய்யும் போது அவசரத்தைக் குறிப்பிடவும். இந்த தீர்ப்பு வரவில்லை என்றால் உங்களுக்கு ஏற்பட போகிற இழப்பை குறிப்பிடுங்கள்.
  2.  ஆவணங்கள் இருப்பின் ஆவணங்களை விண்ணப்பம் மூலம் முன்கூட்டியே தாக்கல் செய்யுங்கள். குறிப்பாக : பத்திரங்கள், புகைப்படங்கள்,காசோலைகள் போன்ற வழக்கு சம்மந்தமான நீதிபதி நம்ப தகுந்த ஆவணங்கள் இருந்தால் முன்கூட்டியே தாக்கல் செய்வது விரைவாக உங்களுக்கு தீர்ப்பு கிடைக்க உதவியாக இருக்கும்.
  3. சாட்சியங்கள் இருந்தால் அதை விரைந்து நீதிமன்றத்தில் ஆஜராக்குங்கள்.
  4. எதிர் தரப்பு IA-வை எதிர்த்தால், நீதிமன்றம் அவர்களுக்கு பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் அளிக்கலாம். எதிர்மனுதாரர் பதிலளிக்க அதிக நாட்கள் எடுத்துக்கொண்டால் அதிக நாட்கள் அவர்கள் எடுத்துக்கொள்ளக்கூடாது என நீதிமன்றத்தில் ஆட்சேபனை செய்யுங்கள்.
  5. நீதிமன்ற விடுமுறை நாட்களை கவனத்தில் கொள்ளுங்கள்.

முடிவுரை சுருக்கம் : 

ஒரு வழக்கில் முக்கிய மனுவிலிருந்து வேறுபட்டு மனுவின் மனுதாரரோ அல்லது எதிர்மனுதாரரோ அதே பிரச்சனை சம்மந்தமாக வேறு ஒரு தீர்ப்பை கோரி நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படுவது தான் இந்த IA மனு என்பது ஆகும். அந்த மனுவையும் நீதிமன்றம்  விசாரணை செய்து விசாரணை முடிவில் தான் அதற்கும் தீர்ப்பு வழங்குகிறது. இது வழக்கு முடிவதற்கு முன்பாகவோ அல்லது வழக்கு முடிந்த பிறகும் கூட தீர்ப்பு வழங்கப்படலாம். இதற்கு கால அளவுகள் இல்லை வழக்கின் தன்மையை பொறுத்து விரைவாகவோ அல்லது இரண்டு, மூன்று மாதங்கள் தாமதமாகவோ IA மனுவின் தீர்ப்பு வழங்கப்படலாம்.

அவசர வழக்குகளில், ஒரு IA உத்தரவு ஒரு நாள் முதல் ஒரு வாரத்திற்குள் வரக்கூடும்.

வழக்கமான வழக்குகளில், சிக்கலான தன்மை, எதிர்ப்பு மற்றும் நீதிமன்றப் பணிச்சுமை ஆகியவற்றைப் பொறுத்து 1–3 மாதங்கள் அல்லது அதற்கு மேல் ஆகலாம்.

நீண்ட நாட்களாக உங்களுடைய வழக்கில் IA மனுவில் தீர்ப்பு வழங்காமல் காலதாமதம் ஏற்பட்டுக் கொண்டு இருந்தால் காலதாமதத்திற்கான காரணம் என்ன என்பதை ஒரு வழக்கறிஞரை அணுகி ஆலோசனை பெறுவது சிறந்த வழியாகும்.

Post a Comment

Previous Post Next Post