தமிழ்நாடு நகர காவல் சட்டத்தின் பிரிவு 75 என்றால் என்ன?
தமிழ்நாடு நகர காவல் சட்டம், 1888 இன் பிரிவு 75 சட்டம் பொது ஒழுங்கைப் பேணுவதற்கான தடுப்பு நடவடிக்கையை முதன்மையாகக் கையாள்கிறது, குறிப்பாக அமைதி மீறல்கள் அல்லது பொதுத் தொல்லைகள் தொடர்பானது.
TNCP Act 75 பிரிவின் கீழ் காவல்துறை யாருக்கெல்லாம் தண்டனை வழங்கலாம்.
பிரிவு 75 – சந்தேகத்திற்குரிய நபர்கள் குற்றம் செய்வதை தடுக்க குற்றவாளிகளுக்கு எதிராக இந்தப் பிரிவின் கீழ் காவல்துறை அல்லது நீதிபதி ஒரு நபருக்கு எதிராக தடுப்பு நடவடிக்கை எடுக்கலாம். அவை பொது இடங்களில் குடிபோதையில் மற்றும் மது அல்லது போதைப்பொருளின் மயக்கத்தில் இருப்பது, அல்லது வன்முறை, ஆரவாரம், ஒழுங்கற்ற, கலவரம்,ஆபாசமான பேச்சு அல்லது அநாகரீகமான முறையில் நடந்துகொள்வது, தொடர் திருட்டு, தொடர்ச்சியாக வீடு புகுந்து திருடுதல் அல்லது அமைதியைக் குலைக்கும் வகையில் அச்சுறுத்தும், துஷ்பிரயோகம் செய்யும் அல்லது அவமதிக்கும் வார்த்தைகளைப் பேசுபவது போன்ற குற்றச் செயல்களில் வழக்கமாக ஈடுபடுபவர்கள் மேலும் யாருடைய பொது அமைதியைக் குலைக்கும் வகையில் குற்றத்தை மீண்டும் மீண்டும் செய்யக்கூடும் என்று நம்பினால் TNCP Act 75 பிரிவின் கீழ் காவல்துறை அதிகாரிகள் குற்றவாளியை கைது செய்து நடவடிக்கை எடுத்து தண்டனை வழங்கலாம்.
75 வழக்கின் கீழ் எடுக்கப்படும் நடவடிக்கைகள்?
தொடர் குற்றம் தொடர்ந்து செய்தாலோ அல்லது உங்களால் குற்றம் நிகழும் என காவல்துறை அதிகாரி சந்தேகித்தாலோ தமிழ்நாடு சிட்டி போலீஸ் சட்டம் பிரிவு 75 வழக்கு போடப்பட்டு ஒரு நீதிபதியின் முன் அந்த நபரை ஆஜர்படுத்துவர்கள் நீதிபதி உங்களை விசாரித்து உங்களால் ஆபத்து ஏற்படும் என கருதினால் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பிணை கொடுக்காமல் சிறையில் வைக்கலாம் அல்லது பிணையில் விட உத்தரவிடலாம்
தொடர் குற்றம் செய்பவர்கள் குற்றம் செய்யாமல் இருக்க ஒரு வருடம்வரை சிறையில் வைக்கலாம். அவரால் அந்த குற்றவாளியால் யாருக்கும் ஆபத்தில்லை என்றால் அவருக்கு அபராதம் விதித்து வழக்கிலிருந்து விடுதலை செய்யலாம்.
சில குற்றம் இவரால் நடக்கும் என காவல்துறை அதிகாரி கணித்தல் இந்த சட்டத்தின்படி அந்த நபரை குற்றம் செய்வதற்கு முன் கைது செய்யலாம் இது கடந்த கால குற்றத்திற்கான தண்டனை அல்ல, ஆனால் எதிர்கால தவறான நடத்தைக்கான சந்தேகத்தின் அடிப்படையில் ஒரு தடுப்பு நடவடிக்கை.
பிரிவு 75 வழக்கின் பயன்பாடு என்ன?
காவல்துறை அதிகாரிகள் குற்றங்களை தடுக்க பிரிவு 75 ஐப் பயன்படுத்துகிறார்கள் :
மீண்டும் மீண்டும் குற்றம் செய்யும் குற்றவாளிகள் அல்லது தெரிந்த பிரச்சனை செய்பவர்களுக்கு எதிராக இந்த வழக்கு பதிவு செய்யப்படுகிறது.
குற்றங்கள் நடப்பதற்கு முன்பே தடுக்க இந்த வழக்கு பதிவு செய்யப்படுகிறது.
தேர்தல்கள், போராட்டங்கள், திருவிழாக்கள் அல்லது அமைதியைக் குலைக்கும் சூழ்நிலைகளின் போது குற்றம் நடைபெறாமல் தடுக்க இந்த வழக்கு பதிவு செய்யப்படுகிறது.
உதாரணம் :
காவல்துறை பிரிவு 75 இன் கீழ் அவர்களை நன்னடத்தைக்காகக் கைது செய்ய நடவடிக்கை எடுக்கலாம்.
சங்கிலி பறிப்பு வரலாற்றைக் கொண்ட ஒருவர் நெரிசலான சந்தையில் அடிக்கடி சுற்றித் திரிவதைக் கண்டால் குற்றம் நடக்காமலிருக்க அவரின் மீது இந்த வழக்கை போலீஸ் போடலாம்.
ஒரு பூங்காவில் குடிபோதையில் இருக்கும் ஒருவர் மற்றவர்களை சத்தமாக திட்டினால் வழக்கு பதிவு செய்யப்பட்டு அபராதம் அல்லது சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்.
பொது இடத்தில் மிரட்டல் அல்லது அவமதிப்பு வார்த்தைகளைப் பயன்படுத்தினால் இந்த வழக்கை போட்டு குற்றம் சாட்டப்படலாம்.
ஒரு தனியார் இடத்தில் ஒருவரின் தவறான நடத்தை அண்டை வீட்டாருக்கு அல்லது பொதுமக்களுக்கு பிரச்சனையை ஏற்படுத்தும் வகையில் சுற்றித்திரிந்தால் அவருக்கும் பிரிவு 75 பொருந்தும்.
பதிவின் சுருக்கம் :
பிரிவு 75 இந்தப் பிரிவு குறிப்பாக பொது இடங்களில் குடிபோதையில் மற்றும் மது அல்லது போதைப்பொருளின் மயக்கத்தில் இருப்பது, அல்லது வன்முறை, ஆரவாரம், ஒழுங்கற்ற, கலவரம்,ஆபாசமான பேச்சு அல்லது அநாகரீகமான முறையில் நடந்துகொள்வது, அல்லது அமைதியைக் குலைக்கும் வகையில் அச்சுறுத்தும், துஷ்பிரயோகம் செய்யும் அல்லது அவமதிக்கும் வார்த்தைகளைப் பேசுபவர்களுக்கு தண்டனை வழங்குகிறது, 6 மாதங்கள் வரை சிறைத்தண்டனை அல்லது ₹1,000 அபராதம் விதிக்கப்படுவதன் மூலம் இந்த சட்டம் பொது ஒழுங்கைப் பாதுகாக்கிறது.