காவல்நிலையத்தில் போடப்படும் 75 வழக்கு பற்றிய தகவல்கள். SECTION 75 Tn police act.

  What is Section 75 of TNCP Act?  

what is 75 case in tamilnadu

75 வழக்கு எந்த சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்படுகிறது.

காவல் நிலையத்தில் குற்றம் செய்தவர்களுக்கு எதிராக 75 வழக்கு போடப்படுகிறது. இந்த வழக்கு எந்த சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்படுகிறது என்றால் தமிழ்நாடு சிட்டி போலீஸ் ஆக்ட் பிரிவு 75 இன் கீழ் பதிவு செய்யப்படுகிறது. பொது அமைதிக்கு தொந்தரவு ஏற்படுத்தி தொடர்ந்து பிரச்சனை செய்து கொண்டிருந்தால் அந்த நபர்கள் மீது இந்த பிரிவின்படி குற்ற வழக்கு பதிவு செய்யப்பட்டு தண்டனை வழங்கப்படும். ஆனால் பெரும்பாலான வழக்குகளில் குற்றவாளிகளை மிரட்டுவதற்காக அவர்களை நல்வழிப் படுத்துவதற்காக இந்த 75 வழக்கு காவல் நிலையங்களில் குற்றவாளிகளுக்கு எதிராக பதிவு செய்யப்படுகிறது.

எந்தெந்த காரணங்களுக்காக 75 வழக்கு போடப்படுகிறது.

குற்ற வழக்குகளில் தொடர்புடைய நபர்களின் மீது இந்த 75 வழக்கு போடப்படும் மேலும் இந்த வழக்கு பொது அமைதிக்கு தொந்தரவை ஏற்படுத்திக் கூடிய நபர்கள் மீதும் இந்த வழக்கு போடப்படுகிறது. காவல் நிலையத்தில் சில நேரங்களில் அடி தடி பிரச்சனைகளில் சண்டை போட்ட இருவர் மீதோ அல்லது ஒருவர் மீதோ தமிழ்நாடு சிட்டி போலீஸ் ஆக்ட் பிரிவு 75 வழக்கு போடப்படும்.

இதை தான்  பெட்டி கேஸ் என்று சிலர் சொல்வார்கள். ஆபத்தான காரியங்களில் ஈடுபட்டு பொதுமக்களுக்கு துன்பத்தை கொடுப்பவர்கள் மீது காவல்துறை இந்த வழக்கை போடுகிறார்கள். இது தொடர் குற்றங்களில் ஈடுபடுபவர்கள் மீது  காவல்துறையால் எடுக்கப்படும் ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகும்.

TNCP சட்டம், 1888 இன் பிரிவு 75-ன் சட்ட விளக்கம்.

 பொது அமைதியைப் பேணுவதற்குப் பொறுப்பான ஒரு பொது ஊழியர், சட்டப்பூர்வமான கடமையைச் செய்யும்போது ஒருவரைக் கேள்வி கேட்டால், அதற்கு நாகரீகமாகப் பதிலளிக்க வேண்டும் என்று சட்டம் கூறுகிறது.

இதை இன்னும் எளிமையாக உங்களுக்கு புரிகின்ற மாதிரி சொன்னால், பொது அமைதியை மீறும் ஒரு நபருக்கு சட்டம் தண்டனை அளிக்கிறது.

பொது இடமாக குறிப்பிடுவது மக்கள்  கூட்டம்  இருக்கும் இடங்கள் மேலும் ஒரு படகு அல்லது வேறு ஏதேனும் ஒரு கப்பலில் அல்லது விமானமும்  பொது இடமாக கருதப்படும் என்று சட்டம் கூறுகிறது.

 75 வழக்கிற்கு வழங்கப்படும் தண்டனைகள். 

  75 case punishment.. 

 பொது அமைதிக்கு பங்கம் விளைவிப்பவருக்கு அதிகபட்சமாக ஆறு மாதங்கள் சிறை அல்லது ரூ.1000. தண்டனையாக விதிக்கலாம்.

 இந்த வழக்கு போடப்பட்டல் வெளிநாட்டிற்கு பாஸ்போர்ட் எடுத்து போகமுடியுமா இந்த வழக்கில் அபராதம் கட்டினால்  வெளிநாட்டிற்கு போக முடியுமா என நிறைய மக்களுக்கு சந்தேகம் இருக்கு அவர்களுக்காக  தான் இந்த பதிவு  கீழே  உள்ள எனது வீடியோவை பாருங்கள் உங்களது சந்தேகத்திற்கு அது விடை அளிக்கும் விடியோவை பார்க்க இதை அழுத்தவும்.SECTION 75 

Post a Comment

أحدث أقدم