குடும்ப வன்முறை-Domestic violence.
What Is Domestic Violence?
குடும்ப வன்முறை(Domestic violence) என்பதை பற்றி இன்றய சட்ட பதிவில் பார்ப்போம் உடல்ரீதியாகவோ, பாலியல்ரீதியாகவோ, மன ரீதியாகவோ அல்லது பொருளாதார ரீதியாகவோ குடும்பத்தில் ஒருவர் ஒடுக்கப்படுவதும், அவர்கள் அச்சுறுத்தப்படுவதும் தான் குடும்ப வன்முறை எனபடுகிறது.
What Is Domestic Violence?
குடும்ப வன்முறை(Domestic violence) என்பதை பற்றி இன்றய சட்ட பதிவில் பார்ப்போம் உடல்ரீதியாகவோ, பாலியல்ரீதியாகவோ, மன ரீதியாகவோ அல்லது பொருளாதார ரீதியாகவோ குடும்பத்தில் ஒருவர் ஒடுக்கப்படுவதும், அவர்கள் அச்சுறுத்தப்படுவதும் தான் குடும்ப வன்முறை எனபடுகிறது.
குடும்ப வன்முறையின் வகைகள் :
உடல்ரீதியான குடும்ப வன்முறை செய்வது.
உடல்ரீதியாக துன்புறுத்துவது தான் இந்த வகை குடும்ப வன்முறைகளாகும் கன்னத்தில் அறைவது, அடிப்பது, உதைப்பது, தள்ளுவது, கையில் கிடைத்த பொருளை வீசி எறிவது ஆயுதம் கொண்டோ அது இல்லாமையோ தாக்குவது போன்றவை உடல்ரீதியான குடும்ப வன்முறை செயலாகும்.
மனரீதியாக குடும்ப வன்முறை செய்வது.
சந்தேகப்படுவது, ஆபாசமாக திட்டுவது, அவதூறு செய்வது, தனிமைப்படுத்துவது மேலும் எப்பொழுதும் திட்டிக்கொண்டும் வாய்சொல்லால் வசைபாடுவது போன்றவை மன ரீதியான வன்முறைகள்.இதனால் மன உளைச்சல் ஏற்படுகிறது.
பாலியல்ரீதியாக குடும்ப வன்முறை செய்வது.
பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுப்பது அதாவது ஒரே வீட்டில் வசிப்பவர்கள் ஒருவரை முறைதவறி பாலியல் உறவுக்கு அழைப்பது மேலும் கணவன் ஆனாலும் விருப்பம் இல்லாமல் பாலியல் உறவுக்கு அழைத்து துன்புறுத்த கூடாது. விருப்பமில்லாமல் தொட்டுப் பேசுவதும் , முத்தமிடுவதும், கட்டியணைப்பதில் தொடங்கி வல்லுறவு செய்வது. போன்றவை பாலியல்ரீதியான குடும்ப வன்முறை செயலாகும்.
பொருளாதார ரீதியாக குடும்ப வன்முறை செய்வது.
பணம் வேண்டி தொந்தரவு செய்வது. பணத்திற்காக கணவர் மனைவியை அடிப்பது மற்றும் மனைவி வீட்டில் பணத்தை வாங்கி வர சொல்வது, குடும்ப உறுப்பினர் ஒருவர் பணத்திற்காக இன்னொருவரை துன்புறுத்துவது பொருளாதார ரீதியாக குடும்ப வன்முறை செய்வதாகும்.
குடும்ப வன்முறை சட்டம் யார் மீது நடவடிக்கை எடுக்கும்.
குடும்ப வன்முறை சட்டம் எப்போது அமலுக்கு வந்தது?
குடும்ப வன்முறை நமது இந்தியாவில் 70%சதவிகிதம் பெண்கள் குடும்ப வன்முறையால் துன்புறுத்தப்படுவதாக புள்ளி விபரங்கள் சொன்னதை அடுத்து மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் இணைந்து இந்த அமைப்புகளால் குடும்ப வன்முறை பெண்கள் பாதுகாப்புச் சட்டம் இயற்றப்பட்டு அது 2005ம் ஆண்டு அமலுக்குவந்தது.குடும்ப வன்முறை சட்டதின் தண்டனைகள்.
குடும்ப வன்முறை சட்டத்தின் அடிப்படையில் கணவன் தன் மனைவியை அடித்தாலோ அல்லது அவமானப்படுத்தி துன்புறுத்தினாலோ இருபதாயிரம் ரூபாய் அபராதமும், ஓராண்டு சிறை தண்டனையும் கிடைக்கும். மேலும் குற்றத்துக்கு ஏற்ப தண்டனை வழக்கப்படுகிறது.
பெண்கள் மீதும் குடும்ப வன்முறை சட்டம் பாயுமா?
குடும்ப வன்முறை புகார் என்பது ஆண்களுக்கு மட்டும் தண்டனை வழக்கும் என்பதிலை இந்த சட்டம் பெண்கள் மீதும் பாயும். இதை மும்பை உயர் நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.பெண்களுக்கான நீதியை உறுதி செய்யும் விதமாகவே இச்சட்டத்தைப் பார்க்க வேண்டும். அவர்களுக்கு ஏமாற்றத்தைத் தருவதாக இருந்தால் சட்டமே பொருளற்றுப் போய்விடும். குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண் ஆண்களுக்கு எதிராக புகார் தருவது போலவே ஆண்களும் பெண்களுக்கு எதிராக புகார் செய்யலாம் என ஒரு மனுவை விசாரித்த நீதிபதி தன் தீர்ப்பில் குறிப்பிட்டிருக்கிறார்.
2019Accident case
ReplyDeleteCourt ena status theriyala
Insurance claim pananum sir
Pls help me sir
Post a Comment