இந்தியாவில் பெண்கள் பெரும்பாலும் மருத்துவமனை உள்ளிட்ட இடங்களில் பெயர் பதிவுசெய்யும்போது, கணவர் பெயர் சேர்த்தோ, அவரது பெயரின் முதல் எழுத்தை இனிஷியலாகவோ கொடுக்கப் பழகியிருக்கிறார்கள்.

திருமணத்திற்கு பின் அதையே தொடர்ந்து பழக்கபட்டு திரும்பவும் தேர்வு அல்லது வேலைக்கு விண்ணப்பம் எழுதும்போதும், தங்களின் இனிஷியலாக கணவர் பெயரின் முதல் எழுத்தை எழுதிவிடுகிறார்கள்.

மேலும் அந்த பெண்களின் கல்வி, பிறப்புச் சான்றிதழ்களிலோ அப்பா பெயரின் முதல் எழுத்தே இன்ஷியலாக இருக்கும் போது, அலுவலகம் ரீதியான குழப்பங்கள் ஏற்படுகின்றது.

தற்போது வங்கி தேர்வு எழுதுவதற்கு வந்த பெண்களுக்கும் இதே சிக்கல் நேர்ந்து அவர்களிடம திருமணச் சான்றிதழ், பிறப்புச் சான்றிதழ் எனக் கேட்டு அதைசரியாக கொடுக்கமுடியாமல். இதனாலேயே சிலர் தேர்வு எழுத முடியாமல்கூட போய்விட்டது.




இனிஷியல் மாற்றம் பெண்களுக்கு மட்டும் ஏன்?

ஆண்களுக்குத் திருமணத்துக்கு முன்போ பின்போ ஒருபோதும் இனிஷியல் பிரச்னைகள் வருவதில்லை. பெண்களுக்கு மட்டும் ஏன் இந்த மாற்றம்?என்ற கேள்விக்கான எனது பதில்.

“பொது சிவில் சட்டம் பற்றி இப்போது அதிகம் விவாதிக்கப்படுகிறது. அதா­வது பொது சிவில் சட்டம் என்பதை ஆண், பெண் இருவருக்கும் பொதுவானதாக மாற்றுவதே மிக சரியாக இருக்கும். பெண்களுக்கு இனிஷியல் பிரச்னை எப்போது வந்தது? அவர்கள் படிக்கவும் வேலைக்கும் செல்லும் போது தான் ஏற்பட்டது.

பெண்கள் திருமணத்துக்கு முன் தந்தைக்கும் திருமணத்துக்குப் பிறகு கணவனுக்கும் அதே கணவன் இறந்துவிட்டால் மகனுக்கும் கட்டுப்பட்டிருக்க வேண்டும் எனும் சிலரால் வகுக்கப்பட்ட வரையறைகளே பெண்கள் தங்கள் சுயத்தை இழந்து நிற்கக் காரணம்.

மதங்கள் பெண்கள் பெயர்களை இழக்கச் செய்கின்றனவா?

இந்தியாவில் கொஞ்ச காலத்துக்கு முன்பு வரை கணவர் பெயரைக் கூட பெண்கள் சொல்ல மாட்டார்கள். சொல்ல கூடாது. மேலும் திருமண நிகழ்ச்சிகளின் பத்திரிகைகளில் மணமக்களின் தந்தை பெயர் மட்டுமே இருக்கும்.

கிறிஸ்தவ மதத்தில் திருமணத்துக்குப் பின், அந்தப் பெண்ணின் பெயரே மறைந்துவிடுகிறது. மரியா எனும் பெண் ஸ்டாலினை திருமணம் செய்தபின், மிஸஸ் ஸ்டாலின் என்றே அழைக்கப்படுகிறார்.

இந்திய முஸ்லீம்கள் வாழ்க்கை முறையில் முன்பெல்லாம் திருமணப் பத்திரிகையில் பெண்ணின் பெயருக்குப் பதில் ‘அழகிய மணமகளை’ என்றுதான் இருக்கும். இந்த ஆண் ஆதிக்க சமூகப் பழக்கங்களின் தொடர்ச்சியாகவே கணவரின் பெயர் இனிஷியலாக பெண்களுக்கு வந்து சேர்ந்திருக்கிறது.

அரசியலமைப்புச் சட்டப்படி பெயரில் இன்ஷியல் மற்றம்.

* ஒரு பெண் ஆண்களைப் போலவே திருமணத்துக்கு முன்னும் பின்னும் தன் தந்தையின் இனிஷியலோடு, ஒரே இனிஷியலோடு இருக்க முடியும்.

* ஒரு இந்தியப் பெண் தனது தந்தையின் பெயரை தனது இனிஷியலாக வைத்திருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. தனது தந்தையின் பெயரையும் தனது தாயின் பெயரையும் இணைத்து அதை இரண்டு இனிஷியலாக வைத்திருக்கலாம். இவை இரண்டுயும் இல்லாமல் தந்தை பெயருக்கு பதில் தாய் பெயரை மட்டும் கூட இனிஷியலாக வைத்திருக்கலாம். 

* இன்ஷியலைத் தேர்வு செய்யும் உரிமையை நமது இந்திய அரசியலமைப்புச் சட்டம் பெண்களுக்கு வழங்கியுள்ளது.

பெயரில் இன்ஷியல் மாற்றம் சுயமரியாதை சார்ந்தது.

இந்தியாவில் பெண் இனிஷியல் மாறுவது என்பது கல்வி மற்றும் வேலை சார்ந்தது மட்டுமல்ல, அவரது சுய மரியாதை சார்ந்ததும்கூட. திருமணத்திற்கு பின்னர் தனது நேசத்துக்கு உரிய தந்தையின் பெயரிலிருந்து பிரிவது நிஜமாகவே வலி தரும் விஷயம்தான்.

காதலித்து திருமணம் செய்திருந்தாலும் கூட இனிஷியலை மாற்றிக் கொள்ளும் போது மனம் குறுகுறுக்கவே செய்யும். அது உளவியலாக அந்தப் பெண்ணை நிச்சயம் பாதிக்கும்.

திருமணம் ஆனபிறகு, பெண்கள் பலரும் தாங்களாகவே கணவரின் பெயரைச் சேர்த்துக்கொள்கிறார்கள். இது அவசியமற்றது என்பதே என் கருத்து. இன்னும் கிராமப்புறம் நகர்ப்புறங்களில் ஆண்கள் வற்புறுத்தி அவர் பெயரை இணைக்கச் சொல்வதையும் பார்க்க முடிகிறது.

இந்தியாவில் அப்பாவின் பெயரை இனிஷியலாக்கிக் கொள்வதே வழக்கமாக உள்ளது. அம்மாவின் பெயரைச் சேர்ப்பதே இல்லை. கேரளாவின் சில பகுதிகளில் விதி விலக்காக அம்மாவின் பெயரை இன்ஷியலாக இணைக்கிறார்கள். அதில் தவறு ஏதுமில்லை.

இந்தியாவில் பெண்ணின் தந்தை ஒரு சரியில்லாதவராகவும் தனது குடும்பத்தை சரிவர நடத்தாமல் குடும்பத்தை விட்டு ஓடியிருந்தாலும் அவரின் பெயரையே அந்த பெண் இறுதிவரை தனது பெயருடன் சுமக்க வேண்டியிருக்கிறது. இந்திய பிள்ளைகள் அம்மாவின் பெயரையும் இனிஷியலாகக் கொள்ளும் பழக்கத்தை ஒருபோதும் முன் வைப்பதேயில்லை.
ஆண்களுக்கு மட்டுமல் பெண்களுக்கும் தனித்த அடையாளம் இருக்கிறது. அவர் இன்ஷியலை கட்டாயம் மாற்ற வேண்டும் என சட்டம் ஏதுமில்லை அவர்கள் தந்தை அல்லது தாய் இன்ஷியலில் விருப்பம் போல் சுதந்திரமாக வாழ நமது சட்டம் வழிவகுத்து கொடுத்துள்ளது சுயமரியதையோடு வாழுங்கள் அதில் குற்றமில்லை.

Post a Comment

Previous Post Next Post