சமூதாயத்தில் தற்கொலைகள் பெருகிவருகிறது ஏன் எதற்காக இந்த சின்ன விஷயத்திற்காகவா தற்கொலை செய்து கொண்டான் என நாம் வியந்து போப்பர்களில் படிக்கிறோம் நம் உறவினர் மற்றும் வீட்டின் அருகில் நடப்பதையும் கவனிக்கிறோம்.
ஆனால் இந்த தற்கொலை வழக்கில் ஒருவர் இன்னொருவரின் தற்க்கொலைக்கு உடந்தை (தூண்டுதல்) என குற்றம் சாட் குற்றம் செய்யாதவர் குற்றம் செய்ததாக இந்த வழக்கில் மாட்டிக் கொண்டால் சரியான விசாரணை நடக்குமா இதிலிருக்கும் சட்ட சிக்கல் என்னென்ன என்று பார்ப்போம். அதே நேரம் தற்கொலைக்கு தூண்டுதல் என்ற பெயரில் கைது செய்யப்படும் போது உண்மையான குற்றவாளி தண்டிக்கபடுவாரா குற்றத்திற்கு தண்டனை என்னென்ன என்பதையும் தெரிந்துகொள்வோம்.
#Abetmentsuicide
#suicidecase
குறிப்பு:
இது சம்மந்தமான நீதிமன்ற தீர்ப்பு ஒன்றையும் பதிவின் கடைசியாக பதிவிட்டுள்ளேன். (தற்கொலை உடந்தை என கைது செய்த குற்றமற்ற நபர் விடுதலை).
பொருளடக்கம் :
தற்கொலை சம்பவம் கொலை வழக்காக மாறுமா?
ஒரு தற்கொலை நடந்துவிட்டது என்றால் உடனடியாக காவல் துறை வழக்கு பதிவு செய்து விசாரணையை ஆரம்பிக்கும் விசாரணையில் அது கொலையாக இருந்தால் அது கொலை வழக்காக பதிவு செய்யப்படும் அதே போல இறந்த தற்கொலை செய்த நபர் இன்னெருவர் உடந்தையாக இருந்ததின் அடிப்படையில் தற்கொலை செய்து இருந்தால் தற்கொலை உடந்தை வழக்கு என்று மாற்றப்படும்.
தற்கொலை வழக்கில் விசாரணை முறை?
தற்கொலை உடந்தை வழக்குகளில் பெரும்பாலும் Suicide Note தற்கொலை கடிதம் மிக முக்கியமானது அதில் தான் குற்றவாளி யார் அவரின் நோக்கம் தற்கொலை செய்ய அவரின் தூண்டுதல் ஆகியவற்றை அறிய முடியும்.
தற்கொலை வழக்கில் யார் குற்றவாளி?
தற்கொலை வழக்கில் சம்மந்தப்பட்ட நபருக்கு விசாரணை செய்யாமல் தண்டனை வழங்குவதில்லை இந்த தற்கொலை வழக்கை ஒருவேளை ஒரு நபர் இன்னொரு நபரை பழிவாங்க பயன்படுத்திக்கொள்ள வாய்ப்புகளும் இருக்கு எனவே தீவிர விசாரணைக்கு பிறகு தான் தண்டனை வழங்கப்படும்.
தற்கொலை கடிதத்தை வைத்து தண்டனை வழங்க முடியுமா?
இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 107- 306 (Indian Penal Code - Sec 107 & 306) - தற்கொலை செய்துகொண்ட நபர் தான் தற்கொலை செய்து கொள்வதற்கு இவர்தான் காரணம் என்று தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பாக அவரால் எழுதப்பட்ட கடிதத்தை மட்டும் (Suicide Note) அடிப்படையாக கொண்டு அந்த குற்றத்தை அவர்தான் செய்தார் என்று அதாவது "தற்கொலைக்கு உடந்தையாயிருந்தார்" (Abetment to Suicide) என்று அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ள நபருக்கு தண்டனை வழங்க முடியாது.
தற்கொலை தண்டனைச் சட்டம் மற்றும் தண்டனை காலம் எவ்வளவு?
இ. த. ச பிரிவு 306 தற்கொலைக்கு உடந்தையாக இருப்பவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்க வேண்டும் என கூறுகிறது.அவ்வாறு தண்டனை வழங்குவதற்கு காரணகளாக இருப்பவை.
தற்கொலை வழக்கில் குற்றவாளி என கருத தேவையான காரணங்கள் என்ன?
1).ஒருவர் தற்கொலை செய்திருக்க வேண்டும்.2). தற்கொலைக்கு ஒருவர் உடந்தையாக இருக்க வேண்டும்.
ஆனால் அதே நேரத்தில் உடந்தையாக இருந்தவருக்கு குற்றச் செயல்களில் ஈடுபட்டதற்கான குற்ற மனம் இருக்க வேண்டும்.
மற்றொருவர் தற்கொலை செய்து கொள்ள வேண்டும் என்கிற உள் நோக்கத்தோடு, அந்த செயலை செய்வதற்கு உடந்தையாக ஒருவர் இருக்க வேண்டும்.
பொதுவாக பேச்சுவாக்கில் கூறப்படும் வார்த்தைகளையும் உடந்தையாக இருந்ததாக தவறாக புரிந்து கொள்ளப்பட்டு வருகிறது.
தற்கொலை செய்து கொள்கிற நபர் அதற்கு முன்பாக எழுதப்பட்ட கடிதத்தில், ஒருவருடைய பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது என்ற காரணத்தினால், அந்த நபர் இ. த. ச பிரிவு 306 ன் கீழான குற்றச் செயலில் ஈடுபட்டுள்ளார் என்கிற முடிவுக்கு உடனடியாக வந்துவிடக்கூடாது.
உடந்தையாக இருத்தல் என்பதற்கு பிரிவு 306ல் எவ்வித விளக்கமும் கொடுக்கப்படவில்லை.
ஒரு நபரை சில செயல்களை செய்யும்படியோ அல்லது செய்யாது இருக்கும்படியோ தூண்டி விடுவது என்பதுதான் உடந்தை என்பதற்கு பொருளாகும்.
அவ்வாறு தூண்டிவிடும் செயலானது வார்த்தைகள், செயல்கள் அல்லது எழுத்துக்கள் மூலம் அல்லது செய்கைகள் மூலமாகவும் இருக்கலாம்.
மற்றவர்கள் முன்பு ஒருவரை அவமானப்படுத்திய செயலாகவும் இருக்கலாம்.
எனவே ஒருவர் தற்கொலை செய்து கொள்வதற்கான முடிவினை எடுப்பதற்கு எதிரி ஒரு முக்கியமான பங்கினை ஆற்றியிருக்க வேண்டும்.
காதல் தோல்வியால் காதலன் தற்கொலை செய்து கொள்வது, தேர்வை சரியாக எழுதாததால் மாணவர் தற்கொலை செய்து கொள்வது, வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதால் கட்சிக்காரன் தற்கொலை செய்து கொள்வது போன்ற தற்கொலை சம்பவங்களில் காதலித்த பெண், ஆசிரியர், வழக்கறிஞர் போன்ற நபர்கள் தற்கொலை செய்து கொள்வதற்கு உடந்தையாக இருந்தார்கள் என்று கூற முடியாது.
ஒரு நபர் கோழைத்தனமாக, முட்டாள்தனமாக, பலவீனமான மனநிலை காரணமாக தற்கொலை செய்து கொண்டால், அதற்காக மற்றொரு நபர் மீது தற்கொலைக்கு தூண்டியதாக குற்றம் சுமத்த முடியாது.
தற்கொலைக்கு தூண்டும் செயல் குற்றமாகும். தற்கொலை செய்து கொள்வது, தற்கொலை செய்து கொண்ட நபரின் விருப்பமாக இல்லாமல், அந்த நபர் தற்கொலை செய்து கொள்ள வேண்டும் என்பது எதிரியின் விருப்பமாக இருக்க வேண்டும்.
ஒரு நபர் தற்கொலை செய்து கொள்ள வேண்டும் என்கிற உள்நோக்கத்தோடு எதிரி செயல்பட்டிருக்க வேண்டும்.
அந்த செயல் வார்த்தைகளாகவோ அல்லது கடிதம் மூலமாகவோ நடைபெற்றிருக்கலாம்.
அதேசமயம் மிகவும் பலவீனமான மனநிலை கொண்ட ஒருவர் தற்கொலை செய்து கொண்டால் அதனை ஒருவர் தூண்டிவிட்டதாக கருதுவது தவறு.
ஒருவருடைய முட்டாள்தனமான செயலுக்காக மற்றொரு நபரை பொறுப்பாளியாக்க முடியாது.
அதாவது யாரையும் பழிவாங்க தற்கொலை செய்து கொண்டால் அதற்க்கு தண்டனை வழங்கப்படாது.
எனவே ஒரு பெண் முட்டாள்தனமாக தற்கொலை செய்து கொண்டால் அதற்கு காதலனை தண்டிக்க முடியாது என மதுரை உயர்நீதிமன்றம் ஒரு தீர்ப்பையே கூறியுள்ளது.
எனவே காதலனை, காதலியை, பழிவாங்க வேண்டும் என்ற எண்ணத்தில் கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்டால் அந்த காதலனுக்கு காதலிக்கோ தண்டனை கிடைக்காது என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். தற்கொலை செய்வதை எந்த காரணத்திற்காகவும் ஊக்குவிக்க முடியாது அதே நேரம் குற்றம் செய்தவர் குற்ற எண்ணத்தோடு இதை செய்து இருந்தால் நிச்சயமாக தண்டிக்கபடுவார்.
இதுசம்பந்தமாக குற்ற எண்ணம் இல்லாதவரை தண்டிக்க முடியாது என பகரப்பட்ட நீதிமன்ற தீர்ப்பை கீழே கொடுத்துள்ளேன்:
CRL. OP. NO - 142/2016, DT - 16.06.2016, Manikandan Vs Inspector of police, Tiruneelakkudi Police Station, Thanjavur District (2016-4-MLJ-CRL-240)
Super explanation
ReplyDeleteநன்றி
Deleteஅனைவரும் சட்டம் தெரிந்து இருக்க வேண்டும் என்ற உங்கள் எண்ணத்தை பாராட்டுகிறேன்..
ReplyDeletePost a Comment