இந்தியாவில் விவாகரத்து ஆன பிறகு கணவனிடமிருந்து குழந்தையை வாங்குவது என்பது நிச்சயமாக ஒரு சிக்கலான விஷயம்தான் இருந்தாலும் சட்டத்தில் இதற்கான வழிமுறைகளை கொடுத்துள்ளார்கள். குழந்தை பராமரிப்பு காவல் (Child Custody) சட்டத்தின்படி ஒரு குழந்தையை தாயோ அல்லது தந்தையோ வளப்பதற்கான உரிமையை பெற முடியும்.

#ChildCustody

குழந்தைக் காவலை பெறுவதற்கு பொருந்தக்கூடிய சட்டங்கள் குழந்தை காவல் வேண்டி மனு செய்தல் நீதிமன்றம் எதை பரிசீலனையில் எடுத்துக் கொள்ளும் எப்படியான காரணங்களுக்கு குழந்தை காவல் வழங்கப்படுகிறது ஒரு வேலை ஏற்கனவே குழந்தை பராமரிப்பு இன்னொருவரிடம் இருக்கிறது என்றால் அதை திரும்ப பெற முடியுமா என்ற பல கேள்விகளுக்கும் இந்த கட்டுரையில் உங்களுக்கு பதில் கிடைக்கும் தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள். 

இந்திய சட்டத்தின் அடிப்படையில் ஒரு படிப்படியான வழிகாட்டி இங்கே :

1. பொருந்தக்கூடிய சட்டத்தைப் புரிந்து கொள்ளுங்கள்.

இந்தியாவில் குழந்தைக் காவல் விஷயங்கள் முதன்மையாக மதத்தைப் பொறுத்து பின்வரும் சட்டங்களால் நிர்வகிக்கப்படுகின்றன :


  • இந்து சட்டம்: இந்து சிறுபான்மையினர் மற்றும் பாதுகாவலர் சட்டம், 1956 + பாதுகாவலர்கள் மற்றும் பாதுகாவலர்கள் சட்டம், 1890 (Hindu Minority and Guardianship Act, 1956 + Guardians and Wards Act, 1890)

  • முஸ்லிம் சட்டம்: தனிப்பட்ட சட்டத்தின் அடிப்படையில் + பாதுகாவலர்கள் மற்றும் பாதுகாவலர்கள் சட்டம் (Based on personal law + Guardians and Wards Act)

  • கிறிஸ்தவ சட்டம்: இந்திய விவாகரத்து சட்டம், 1869 (Indian Divorce Act, 1869)

  • பார்சி சட்டம்: பார்சி திருமணம் மற்றும் விவாகரத்து சட்டம், 1936 (Parsi Marriage and Divorce Act, 1936)

  • மதச்சார்பற்ற (இடைமத அல்லது பிறருக்கு): பாதுகாவலர்கள் மற்றும் பாதுகாவலர்கள் சட்டம், 1890 (Secular (for interfaith or others)Guardians and Wards Act, 1890)

2. என்னென்ன குழந்தை காவல் பராமரிப்புக்கு விண்ணப்பிக்கலாம் : 

இந்திய சட்டத்தின் கீழ் நீங்கள் என்னென்ன காவல் வகைகளுக்கு விண்ணப்பிக்கலாம் (Custody under Indian Law) :

உடல் ரீதியான காவல் (Physical Custody) : 

உங்களுடன் வசிப்பதற்காக உடல் ரீதியான காவலைக் கேட்டு நீதிமன்றத்தில் விண்ணப்பிக்கலாம்.

கூட்டு காவல் (Joint Custody) : 

இரு பெற்றோர்கள் ஒன்று சேர்ந்து பேசி முடிவு செய்து கூட்டு காவலை கேட்டு நீதிமன்றத்தில் விண்ணப்பிக்கலாம். அதாவது சில நாட்கள் தந்தையுடனும் சில நாட்கள் தாயுடனும் அந்த குழந்தை வாழ்வதற்கான வசதி வாய்ப்புகளை பெற்றோர் ஏற்படுத்திவிட்டு அதைக் கேட்டு நீதிமன்றத்தில் விண்ணப்பித்து தகுந்த உத்தரவின் அடிப்படையில் அந்த குழந்தைக்கு ஒரு நல்ல வாழ்க்கையையும் அன்பையும் அந்த பெற்றோர்கள் ஏற்படுத்திக் கொடுக்க முடியும்.

சட்டப்பூர்வ காவல் (Legal Custody) : 

குழந்தையை பராமரிப்பவர் அந்த குழந்தையின் எதிர்காலத்தில் கவனமில்லாமல் இருக்கிறார் என்றால் அந்த குழந்தையின் பராமரிப்பை கேட்டு இன்னொருவர் நீதிமன்றத்தில் சட்டரீதியாக காவலை கேட்டு விண்ணப்பிக்கலாம். குறிப்பாக இது குழந்தையின் முக்கிய முடிவுகளை எடுக்கக் கூடிய ஒரு உரிமையாகும் அது அந்த குழந்தையின் எதிர்காலத்திற்கு மிக முக்கியமானதாகும் அதாவது கல்வி, சுகாதாரம்,ஆரோக்கியம் அன்பு ஆகியவை குழந்தையின் எதிர்காலத்திற்கு மிக முக்கியமானவை ஆகும் அதில் கவனம் கொள்ளாமல் அந்த குழந்தையை பராமரிப்பவர் இருக்கும் பட்சத்தில் சட்டரீதியான காவலை கேட்டு நீதிமன்றத்தில் விண்ணப்பம் செய்யலாம்.

வருகை உரிமைகள் (Visitation Rights) : 

குழந்தையின் காவல் உங்களுக்கு கிடைக்கவில்லை என்றால் அந்த குழந்தையை பார்ப்பதற்கான உரிமையை நிச்சயமாக பெற முடியும் அதற்காக நீதிமன்றத்தில் நீங்கள் பார்வை காவல் கேட்டு விண்ணப்பிக்கலாம்.

3. காவல் மனு தாக்கல் செய்யுங்கள் (File a Custody Petition) :

விவாகரத்தின் போது காவல் உத்தரவு பிறப்பிக்கப்படாவிட்டால் அல்லது அதை மாற்றியமைக்க விரும்பினால், பாதுகாவலர்கள் மற்றும் வார்டுகள் சட்டம், 1890(Guardians and Wards Act, 1890) இன் கீழ் பொருத்தமான குடும்ப நீதிமன்றத்தில் காவல் மனு தாக்கல் செய்யலாம்.

குழந்தை தனது பராமரிப்பாளருடன் எந்த அதிகார வரம்பில் வசிக்கிறதோ அந்த அதிகார வரம்புக்கு (jurisdiction) உட்பட்ட குடும்ப நல நீதிமன்றத்தில் இந்த வழக்கை விண்ணப்பிக்கலாம்.

குழந்தை உங்களுடன் வாழ்ந்தால் அதனுடைய எதிர் காலத்தில் எந்த பாதிப்பும் ஏற்படாது அந்த குழந்தைக்கு ஒரு நல்ல சிறந்த எதிர்காலத்தையும் அன்பையும் உங்களால் வழங்க முடியும் என்று உறுதியாக இருப்பதை நீதிமன்றத்தில் தெரியப்படுத்த வேண்டும் அதன் அடிப்படையிலேயே இந்த வழக்கை நீங்கள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்.

4. குழந்தைகள் காவல் வழக்கில் நீதிமன்றம் எதையெல்லாம் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளும் :

நீதிமன்றத்தில் குழந்தையின் காவல் கேட்டு நீங்கள் விண்ணப்பித்திருந்தால் நீதிமன்றம் பின்வருவனவற்றைக் கருத்தில் கொள்ளும் :

  • குழந்தையின் நலன் இது மிக முக்கியமான காரணி ஆகும்.

  • குழந்தையின் வயது மற்றும் பாலினம் அதை பொறுத்து அந்த குழந்தையின் எதிர்கால வாழ்க்கைக்கு பெற்றோர் எப்படி உதவமுடியும் என்பதையும் நீதிமன்றம் கருத்தில் கொள்ளும்.

  • குழந்தையின் விருப்பம் காவல் வழக்கில் முக்கியமானதாக கருதப்படுகிறது குழந்தையின் வயதை பொருத்து அந்த குழந்தையால் ஒரு முடிவை எடுக்க முடியும் என்றால் அந்த குழந்தையின் விருப்பத்தையும் நீதிபதி கருத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும் அதன் அடிப்படையில் குழந்தையின் காவல் பெற்றோருக்கு வழங்கப்படலாம்.

  • பெற்றோர் இருவரின் வருமானம் மற்றும் அந்த பெற்றோரின் மனநிலைகள் எவ்வாறு இருக்கிறது என்பதை எல்லாம் ஒரு நீதிமன்றம் பரிசீலனையில் எடுத்துக்கொண்டு அதன் அடிப்படையில் குழந்தையின் பராமரிப்பு காவல் கொடுக்கப்படலாம்.

  • பெற்றோரின் கடந்த கால நடத்தைகள் அவர்களுடைய குணாதிசயங்கள் மற்றும் செயல்பாடுகள் எப்படி இருக்கிறது என்பதை எல்லாம் ஒரு நீதிமன்றம் பரிசலனையில் எடுத்துக் கொண்டுதான் அவருக்கு குழந்தையின் பராமரிப்பு காவல் கொடுக்கப்படுகிறது.

  • ஐந்து அல்லது ஏழு வயதுக்குட்பட்ட குழந்தைகள் மனதளவில் சிறப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக பெரும்பாலும் தாயையே காவல் பராமரிப்பாளராக நீதிமன்றம் பரிசீலனை செய்கிறது ஒருவேளை தாயின் குணாதிசயம் மற்றும் செயல்பாடுகள் மனநிலை குறைவு போன்றவை காரணமாக இது மறுக்கவும்ப் படலாம் இப்படி பல காரணிகளை கருத்தில் கொண்டு தான் ஒரு குழந்தையின் காவல் பராமரிப்பு அவருடைய பெற்றோர்களுக்கு தனித்தனியாகவோ அல்லது கூட்டாகவோ நீதிமன்றத்தால் வழங்கப்படுகிறது.

5. காவல் ஏற்கனவே வழங்கப்பட்டிருந்தால் :

குழந்தையின் பராமரிப்பு காவல் ஏற்கனவே வழங்கப்பட்டிருந்தால் அதை திருத்தி மாற்ற முடியுமா :

குழந்தையின் காவல் பராமரிப்பு ஏற்கனவே கணவருக்கோ அல்லது மனைவிக்கோ வழங்கப்பட்டிருந்தால் அதை திருத்தம் செய்து மாற்றுவதற்கு நீங்கள் நீதிமன்றத்தில் விண்ணப்பிக்கலாம்.

குழந்தையின் காவல் பராமரிப்பை திருத்த விரும்பினால் நீதிமன்றத்தில் ஒரு மனுவை தாக்கல் செய்ய வேண்டும் ஆனால் இதில் உரிய காரணங்கள் இன்றி ஏற்கனவே வழங்கப்பட்ட பராமரிப்பை மாற்ற முடியாது விசாரணையின் போது ஏற்கனவே வழங்கப்பட்ட குழந்தையின் பராமரிப்பு கவலை மாற்ற வேண்டும் என்று சரியான காரணங்கள் எடுத்துரைக்கப்படவில்லை என்றால் நீதிமன்றம் திருப்தி அடையாத போது இந்த மனுவை தள்ளுபடி செய்துவிடும்.

சூழ்நிலைகளில் ஏற்படும் மாற்றத்தைக் காட்டுங்கள் (எ.கா., தந்தையின் புறக்கணிப்பு, உங்கள் மேம்பட்ட நிலைமை, குழந்தையின் விருப்பம்).

6. சட்ட உதவியை நாடுங்கள் :

கஸ்டடி வழக்குகளில் அனுபவம் வாய்ந்த குடும்பச் சட்ட வழக்கறிஞரை நியமிக்கவும். இது அவசியம், குறிப்பாக தந்தை குழந்தையின் பராமரிப்பு காவலில் போட்டியிடுகிறார் என்றால் நீங்கள் ஒரு வழக்கறிஞரின் ஆலோசனையில் செயல்படுவது நல்லது.

7. இடைக்கால காவல் அல்லது வருகை :

வழக்கு நடவடிக்கைகளின் போது நீங்கள் இடைக்காலமாக குழந்தையின் பராமரிப்பு காவலை அல்லது குழந்தையின் வருகை உரிமைகளை நீதிமன்றத்தில் கேட்டு பெற்றுக் கொள்ளலாம்.

வருகை உரிமை என்பது குழந்தையை பார்ப்பதற்கான அனுமதி கேட்பது ஆகும். நீதிமன்றம் குழந்தையை பார்ப்பதற்கான உரிமையை ஒரு தாய்க்கோ தந்தைக்கோ வழங்க முடியும் அது ஒரு குறிப்பிட்ட நேரமாகவோ அல்லது நாட்களாகவோ இருக்கலாம்.

குழந்தையை சட்ட விரோதமாக கணவர் நீதிமன்றத்தில் இருந்தும் தாயிடம் இருந்தும் மறைத்து வைத்திருந்தால் நீங்கள் உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்யலாம் குழந்தையை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த காவல்துறைக்கு நீதிமன்றம் உத்தரவிடலாம்.

Post a Comment

Previous Post Next Post