வழி பாதை சம்பந்தமான பல சந்தேகங்கள் மக்களுக்கு இருக்கிறது அதற்கு சுருக்கமாக பதிலை இந்த கட்டுரையில் தந்துள்ளேன்.

#Know-the-right-of-way-for-the-property

வழிப் பாதையின் உரிமை என்றால் என்ன ?

சொத்துக்களுக்கு பாதை என்பது அவசியமான ஒன்று சாலையின் பக்கத்தில் இருக்கும் சொத்துக்கள் வழிப்பாதையை சுலபமாக அடைந்துவிடும் ஆனால் சாலைக்கு அருகிலுள்ள சொத்திற்கு பின்னால் அமைந்திருக்கும் சொத்துக்களுக்கு பாதை வசதி எப்படி கிடைக்கும் அதற்கு தான் பாதை உரிமையை நிலைநிறுத்த வசதி உரிமை சட்டம் கொண்டுவரப்பட்டது.

இந்த பாதை உரிமை என்பது கால பழக்கத்தில் பல ஆண்டுகளாக பயன்படுத்திய பாதைக்கு மட்டுமே பொருந்தும். இந்த உரிமையை தெளிவுபடுத்தும் சட்டம் தான் ஈஸ்மென்ட்ஸ் ரைட்ஸ் சட்டம் அதாவது வசதி உரிமை சட்டம். இந்த சட்டத்தில் பாதையின் உரிமையை பற்றி தெளிவாக வரையறுத்துள்ளனர், இதன் அடிப்படையில் பாதை உரிமை உட்பட பல்வேறு உரிமைகளை பெற முடியும்.

வழிப் பாதை வேறொருவரின் நிலத்தில் அமைந்திருந்தாலும், உருவாக்கப்பட்ட  பாதை வழியாக சாலை அல்லது கட்டிடம் போன்ற ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு செல்லவும் வரவும் இந்த சட்டம் உரிமை அளிக்கிறது. 

ஒருவேளை உங்களை தடை செய்தல் சட்டரீதியான உரிமை மூலம் பாதையின் உரிமையை நிறுவ முடியும். பயன்படுத்திய பாதையை தடை செய்யும் போது சட்ட உரிமையின்படி நீதிமன்றத்தை அணுகி பாதை வசதியை பெற முடியும்.

இன்னெருவரின் சொத்திற்கு உரிமைப்பட்ட பாதையில் உரிமை உண்டா.

இன்னொருவர் தனது சொத்திற்கு வேண்டி தனிப்பட்ட முறையில் பாதையை விலைக்கொடுத்து வாங்கி அதில் மதில்சுவர் கட்டி தனிப்பட்ட முறையில் பயன்படுத்தினால் அதில் உரிமையை கேட்க முடியாது.இதை தான் அனுபவ உரிமை என்று சொல்வார்கள். 

உங்கள் சொத்திற்கு போவதற்கு காலம் காலமாக நீங்கள் எந்த வழிதடத்தை உபயோகித்தீர்களோ அந்த பாதையை தடை செய்தால் மட்டுமே எதிர்தரப்பிடம் தடையை நீக்கும்படி நீங்கள் பேச்சுவார்த்தை மேற்க்கொள்ளலாம் . 

தடையை நீக்க பேச்சுவார்த்தை நடத்தும் போது பிரச்சனை பெரிதானால் போலிசிடம் புகார் கொடுக்கலாம். தொடர்ந்து மதில் சுவர் கட்டினாலோ பாதையை தடை செய்தாலோ நீதிமன்றத்தை அணுகி அந்த தடையை நீக்கவும் தடைச் செய்யாமல் இருக்கவும் நீதிமன்ற தடை உத்தரவு பெறலாம்.

தடை உத்தரவு பற்றி தெரிந்துகொள்ள இங்கே அழுத்துஙகள் ➡️ interim stay.

உரிமையின் அடிப்படையில் பாதையை நிறுவலாம். 

ஒருவர் தனது சொத்திற்கு வேண்டி தனிப்பட்ட முறையில் பாதையை விலைக் கொடுத்து வாங்கி கிரயம் பெற்று அந்த உரிமையின் அடிப்படையில் அவர் முழு உரிமையுடன் அந்த பாதையை பயன்படுத்திக்கொள்ளலாம் அதை யாரும் தடை செய்ய முடியாது ஆனால்அந்த பாதையின் உரிமையாளரால் அல்லது சொத்தின் உரிமையாளரால் உரிமைகளைப் பயன்படுத்துவதற்கான உரிமைகளை அவர் உங்களுக்கு விட்டுக்கொடுத்தால், வழியின் உரிமையை எளிதாக நீங்கள் பெற முடியும். அந்த பாதையை பயன்படுத்திக்கொள்ளும் உரிமையை பணம் கொடுத்தோ அல்லது இடம் கொடுத்தோ நீங்கள் உங்களுக்கும் உரிமை மாற்றம் செய்து கொள்ளலாம்.

அனுபவ உரிமைப்படி பாதை.

அனுபவ உரிமைப்படி பாதை உரிமையை பெறுவது. 20 ஆண்டுகளுக்கு மேலாக பயன்படுத்தப்பட்ட ஒரு பாதையை திடீரென ஒரு நபர் தனக்கான பாதை என்று தடுத்து நிறுத்தினால் அனுபவ உரிமையின்படி பாதை உரிமையை நீதிமன்றத்தின் உதவியோடு பெற முடியும்.

பாதையின் உரிமையின் சட்டக் கருத்து. 

பாதையின் உரிமை என்பது இந்திய ஈஸ்மென்ட்ஸ் சட்டம், 1882 இல் வரையறுக்கப்பட்டுள்ள விதிகளின்படி நிர்வகிக்கப்படுகிறது, இது வழி உரிமைகள் உட்பட தடை செய்யப்படுகிற பல்வேறு உரிமைகளை பெறுதல், பிறர் உரிமைகளில் தலையிட்டு தவறான உரிமைகளை திணித்தல் போன்றவற்றை தடுப்பது மற்றும் உங்களுடைய உரிமைகளை பாதுகாப்பதற்கான  கட்டமைப்பை இந்த சட்டம் வழங்குகிறது.

முடிவுரை

சொத்திற்கான பாதை உரிமை என்பது அனைவருக்கும் அவசியமான ஒன்றாகும் நிச்சயமாக எல்லா சொத்திற்கும் பாதை உரிமை இருக்கிறது. உங்களது பாதை தடை செய்யப்படும் போது உங்கள் சொத்திற்கு பாதை இருக்கிறதா அது அனுபவ உரிமை மூலமாக இருக்கிறதா  அல்லது உரிமை மாற்றத்தின் மூலமாக பாதை உரிமை இருக்கிறதா என்பதை கண்டறிந்து சட்ட வழிமுறை மூலமாக அணுகும் போது இந்த பிரச்சனையில் இருந்து வெளியில் வர முடியும் உங்களுடைய வழிப் பாதையை பெற முடியும்.

பாதையின் உரிமையை கண்டறிவது என்பது சிக்கலானது இதில் சரியான முறையில் ஒரு தீர்வை காண வேண்டும் என்றால் ஒரு சட்ட வல்லுனரை அணுகி உங்களது பாதையில் ஏற்படுகிற சட்ட சிக்கலை சிக்கலுக்கு ஆலோசனை பெறுவது சிறந்ததாக இருக்கும்.

Post a Comment

أحدث أقدم