இந்தியாவில் கடன் வழங்குபவர்கள் கடன்களை மீட்டெடுப்பதற்கான தெளிவான, சட்டப்பூர்வமாக வரையறுக்கப்பட்ட வழிமுறைகளை கொண்டுள்ளனர். இறந்தவரின் சொத்து அல்லது கூட்டு அல்லது இணை கடன் வாங்குபவர்கள் மற்றும் உத்தரவாததாரர்களுக்கு எதிரான நடவடிக்கைகளைச் செயல்படுத்துகிறார்கள். அதன் அடிப்படையில் கடன் திருப்பி வசூலிக்கப்படுகிறது.
கடன் வாங்கியவர் இறந்துவிட்டால் கடன் வழங்கிய நபர் ஏனென்ன நடவடிக்கைகளை எடுக்கிறார் எவ்வாறு கடன் தொகை திருப்பி வசூலிக்கப்படுகிறது மேலும் பாதுகாக்கப்பட்ட மற்றும் பாதுகாப்பற்ற கடன் என்றால் என்ன என்பது பற்றியும் கடனில் நீங்கள் கவனிக்க வேண்டிய விஷயங்களைப் பற்றியும் நீங்கள் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் பற்றியும் தொடர்ந்து தெரிந்து கொள்ளுங்கள்.
கடனை திருப்பி செலுத்தும் பொறுப்பு யாருடையது?
கடனை வாங்கியவர் இறந்துவிட்டால் கடன் வழங்கிய நபர் வேறு யாரை அணுக முடியும் அந்த கடனை திருப்பி செலுத்தும் பொறுப்பு யாருடையது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
1. சட்டப்பூர்வ வாரிசுகள் : இறந்த கடனாளியின் பரம்பரை சொத்துக்கள் மற்றும் சொத்திலிருந்து கடனை திருப்பி செலுத்துவதற்க்கான பொறுப்பு சட்டப்பூர்வ வாரிசுகளுடையது. இருப்பினும், அவர்களின் பொறுப்பு மரபுரிமையாகப் பெற்ற சொத்தின் மதிப்புக்கு மட்டுமே பொருந்தும்.
சட்டப்பூர்வ வாரிசுகள் இறந்தவரின் சொத்துடன் சேர்ந்து பொறுப்பையும் அவர்கள் பெறுவார். உதாரணமாக, வீட்டுக் கடனிலிருந்து வீட்டை வைத்திருக்க விரும்பினால், அவர்கள் EMI கொடுப்பனவுகளை (வங்கியின் ஒப்புதல் மற்றும் அவர்களின் கடனின் மறுமதிப்பீட்டிற்கு உட்பட்டு) செலுத்திக்கொள்ள வேண்டும்.
சட்டப்பூர்வ வாரிசுகளின் தனிப்பட்ட சொத்துக்கள் (இறந்தவரிடமிருந்து பெறப்படாதவை) பாதுகாப்பற்ற கடன்களுக்கான மீட்புக்கு எதிராக முழுமையாகப் பாதுகாக்கப்படுகின்றன.
2. இணை விண்ணப்பதாரர்/கூட்டு கடன் வாங்குபவர் : கடன் ஒரு இணை விண்ணப்பதாரருடன் எடுக்கப்பட்டிருந்தால், முதன்மைக் கடன் வாங்குபவரின் மரணத்திற்குப் பிறகு முழுக் கடனையும் திருப்பிச் செலுத்துவதற்கு அந்த நபர் பொறுப்பாவார் அவரிடமிருந்து கடனை வசூலிக்கலாம். குறிப்பாக வீட்டுக் கடன்களில் ஒரு மனைவி அல்லது குழந்தைகள் இணை மற்றும் கூட்டு விண்ணப்பதாரராக இருந்தால் கடனை திருப்பி செலுத்தும் பொறுப்பு அவரையே சாரும்.
3. உத்தரவாதம் அளிப்பவர் : உத்தரவாததாரர் என்பது மூன்றாம் தரப்பினர் ஆவர், அவர் அசல் கடன் வாங்குபவர் கடனைத் திருப்பிச் செலுத்தத் தவறினால் கடனைத் திருப்பிச் செலுத்துவதாகக் கடன் வழங்குபவருக்கு உறுதியளிக்கிறார். கடனில் ஒரு உத்தரவாதம் அளிப்பவர் ஈடுபட்டிருந்தால், கடன் வாங்கியவர் இறந்த பின்னர் நிலுவையில் உள்ள கடன் தொகையை திருப்பிச் செலுத்த அவர்கள் கடமைப்பட்டுள்ளார்.
உத்தரவாததாரர் சட்டப்பூர்வமாக பணம் செலுத்தக் கடமைப்பட்டவர், மேலும் அவர்கள் மறுத்தால் கடன் வழங்குபவர் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கலாம்.
கடனை வழங்கியவர் கடன் தொகையை எவ்வாறு திருப்பி சேகரிக்க வேண்டும் எடுக்க வேண்டிய நடவடிக்கைகளில் சில?
1. சொத்தை மதிப்பிடுங்கள் :
இறந்த கடனாளியின் சேமிப்பு, முதலீடுகள், சொத்து மற்றும் பிற சொத்துக்களை உள்ளடக்கிய சொத்துக்களை கடன் வழங்குபவர் முதலில் மதிப்பிட வேண்டும் பின்னர் அந்த சொத்தை வசூலிப்பதன் மூலமாக கடனை திருப்பி பெறமுடியும்.
2. இணை மற்றும் கூட்டு விண்ணப்பதாரர்கள்/உத்தரவாததாரர்களைத் தொடர்பு கொள்ளவும் :
இணை விண்ணப்பதாரர் அல்லது உத்தரவாததாரர் இருந்தால், கடனை வழங்கியவர் அவர்களை திருப்பிச் செலுத்த அணுகலாம் அவர்களிடமிருந்து கடனை வசூலிக்கலாம்.
3. காப்பீட்டைக் கோருங்கள் :
ஒரு தனிநபர் கடன் காப்பீட்டுக் கொள்கை நீங்கள் எடுத்திருந்தால் கடனை வழங்கியவர் நிலுவைத் தொகையை வசூலிக்க காப்பீட்டு நிறுவனத்திடம் ஒரு கோரிக்கையை தாக்கல் செய்து அதன் மூலமாக தொகையை வசூலிக்கலாம்.
4. சொத்துக்களைப் பறிமுதல் செய்து விற்கவும் :
வீட்டுக் கடன் போன்ற பாதுகாக்கப்பட்ட கடன்களுக்கு, கடன் வழங்கியவர் பிணையத்தை (அடமான சொத்தை) பறிமுதல் செய்து விற்று நிலுவைத் தொகையை வசூலிக்கலாம். இது பாதுகாக்கப்பட்ட கடன்களுக்கு பொருந்தும்.
5. கடனை தள்ளுபடி செய்யுங்கள் :
அனைத்து மீட்பு நடவடிக்கைகளை முடித்த பிறகும், கடனை வசூலிக்க முடியாவிட்டால், கடனை வழங்கியவர் கடனை ஒரு செயல்படாத சொத்து (NPA) என வகைப்படுத்தி அதை தள்ளுபடி செய்யலாம். இது வராக்கடன் எனப்படுகிறது.
பாதுகாக்கப்பட்ட கடன்கள் vs. பாதுகாப்பற்ற கடன்கள் என்பது என்ன?
பாதுகாக்கப்பட்ட கடன் மற்றும் பாதுகாப்பற்ற கடன் என்றால் என்ன இந்த இருக்கடன்களுக்கும் உள்ள வேறுபாடுகள் மேலும் அவற்றின் மீட்பு செயல்முறைகள் எப்படி இருக்கும் என்ற விளக்கம் இங்கே.
பாதுகாக்கப்பட்ட கடன் என்றால் என்ன?
பாதுகாக்கப்பட்ட கடன் என்பது கடன் வாங்குபவர் கடன் வழங்குபவருக்கு உறுதியளிக்கும் சொத்தின் பிணையத்துடன் (அடமானதுடன்) கூடிய கடன்கள் ஆகும் பொதுவான எடுத்துக்காட்டுகள் பின்வருமாறு:
பாதுகாக்கப்பட்ட கடன்கள் உங்களுக்கு சொந்தமான சொத்துக்களால் அதாவது உங்கள் கடனுக்கு பிணையாக (அடமானம்) உங்கள் சொத்துக்களை நீங்கள் அடமானம் வைத்திருப்பதால் அந்த கடன்கள் பாதுகாக்கப்பட்ட கடன் ஆகும். கடன் வாங்கியவர் இறந்துவிட்டால் அந்த பிணைய அதாவது அந்த அடமான சொத்தை விற்ப்பனை செய்து கடன் தொகையை திருப்பி பெறமுடியும்.
கடன் வாங்கியவர் கொடுக்கும் பிணை அவருக்கு உரிமைப்பட்ட சொத்துக்களாக இருக்க வேண்டும் அதாவது வீடு, சொத்துகள், வங்கியில் இருக்கும் வைப்பு தொகை , நிரந்தர வைப்பு தொகை, அல்லது நகையாகயும் இருக்கலாம்.
பாதுகாக்கப்பட்ட கடன் வசூலிக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள்?
பாதுகாப்பற்ற கடன்கள் என்றால் என்ன?
நீங்கள் கவனிக்க வேண்டியது?
கடன் வாங்குபவர்கள் மற்றும் அவர்களின் குடும்பங்களுக்கான நடைமுறை ஆலோசனைகள்?
முடிவுரை :
இந்தியாவில் கடன் வாங்குபவர் இறந்துவிட்டால் கடன் வழங்குபவர் இறந்தவரின் சொத்துக்களிலிருந்து அல்லது இணை மாற்றும் கூட்டு விண்ணப்பதாரர்களிடமிருந்து அல்லது உத்தரவாததாரர்களிடமிருந்து நிலுவையில் உள்ள கடன் தொகையை வசூலிக்க வேண்டும்.
கடன் காப்பீட்டுக் கொள்கை எடுக்கப்பட்டிருந்தால், கடன் வழங்குபவர் காப்பீட்டாளரிடமிருந்து பணத்தைக் கோரலாம், ஆனால் இணை மற்றும் கூட்டு கடன் வாங்குபவர், உத்தரவாதம் அளிப்பவர்கள் அல்லது காப்பீடுகள் இல்லாதிருந்தாலோ கடன் வாங்கியவரிடம் கடன் தொகையை திருப்பி பெற போதுமானதாக சொத்துக்கள் இல்லாவிட்டால், கடனை வழங்கியவர் இறுதியில் கடனை பெறமுடியாமல் போகலாம்.
பாதுகாப்பற்ற கடன்களுக்கு, கடன் வழங்குபவர்கள் பரம்பரை சொத்து அல்லாத சொத்துக்களை பெற்று சட்டப்பூர்வ வாரிசுகளிடமிருந்து கடன்களை மீட்டெடுக்க முடியாது இவை அனைத்தையும் நீங்கள் கருத்தில் கொள்ள வேண்டும்.